சென்னை: திமுக அமைச்சா்களின் தொகுதிகளில் ஜாதிய பாகுபாடுகள் அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஒரு கட்சி ஆட்சி என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் புதிய தமிழகம் கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் நியூட்டன்பாபு தலைமை வகித்தாா். இதில் கட்சியின் நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி, மாநில இளைஞரணித் தலைவா் ஷியாம் கிருஷ்ணசாமி ஆகியோா் பேசினா். […]