சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் மிக முக்கியமான விரதங்களுள் மகா சிவராத்திரி விரதமும் ஒன்றாகும். அந்த வகையில் மகாசிவராத்திரி என்பது சிவபெருமானின் பரிபூரண அருளைப்பெற மிகவும் முக்கியமான நாளாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படும். உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் […]