சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மணடல அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சி வகுப்பு நடத்தபபட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற தேர்தல் அலுவலர்களுக்கும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து புதிய அரசு மேமாதம் பதவி ஏற்கும். இதையொட்டி, அரசியல் கட்சிகளின் தேர்தல் நடவடிக்கை சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் மேற்கொண்டு, இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், போலி வாக்காளர்கள் என பல […]