“மக்கள் போற்றும் மகத்தான தலைவர் அவர்.!"- மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி

‘ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர்’ என பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசிய பிரதமர் மோடி, “மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா - மோடி
ஜெயலலிதா – மோடி

நான் தமிழ்நாட்டிற்கு எப்போது சென்றாலும் அந்த மாநில மக்கள் ஜெயலலிதா மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன்.

ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது.

அந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.

பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அவரது தேசபக்தி மிகப்பெரியது.

என்னுடைய முதல்வர் பதவியேற்பு விழா நடந்த பொழுதெல்லாம் அவர் நேரில் வந்து கலந்து கொண்டார்.

மக்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களி்ன் மனதில் என்றென்றும் இருப்பார்கள் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா.

ஜெயலலிதா - மோடி
ஜெயலலிதா – மோடி

ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது.

ஜெயலலிதாவின் சிந்தனை மிகவும் தெளிவானது. நிர்வாகத்தை திறமையாக கையாள்வது குறித்து நாங்கள் அடிக்கடி ஆலோசித்துள்ளோம்” என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.