சென்னை: நான் திமுகவில் இணைந்து விட்டேன். கடந்த காலங்களைப் பற்றி கவலையே இல்லை. அதிமுகவுக்கு எதிர்காலமே இனி இல்லை,’ என்று திமுகவில் இணைந்த ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். “அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். திமுகவில் இணைந்தபின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான […]