AK – SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது.

தாய் கிழவி
தாய் கிழவி

திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், ” நடிகர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் அந்த வேலைகளை செய்யும்போது தான். இன்று நான் ஒரு ரசிகனாகத் தான் வந்து இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா சார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ” நான் குட்டியாக ஒரு கம்பெனியை வைத்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

அவ்வளவு பெரிய கம்பபெனியாக இன்னும் வளரவில்லை. அப்படி பெரிய கம்பெனியாக மாறிய பிறகு சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

அந்தப் படம் நிச்சயமாக அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். தற்போதைக்கு என்னுடைய சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை எடுத்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.