உளுந்தூர்பேட்டையில் செல்ஃபோன் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்மநபர்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் செல்ஃபோன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம், செல்ஃபோன்களை கொள்ளைடித்து சென்றவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

பிலால் என்பவர் நேற்றிரவு தாம் நடத்தி வரும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில், காலையில் வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பணம், 2 லேப்டாப்கள் மற்றும் 7செல்ஃபோன்கள் திருடு போயிருந்தன.

இதையடுத்து கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இரவில் கடைக்குள் நுழைந்த மர்மநபர் செல்ஃபோன் டார்ச்சை அடித்து பொருட்களை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அந்த கொள்ளையனை 5 மணி நேரத்திற்குள்ளாகவே கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.