ஓட்டுநரின் கவனக்குறைவால் மின்சார ரயில் விபத்து – ஓட்டுநர் சஸ்பெண்ட்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், நடைமேடை மீது மோதி மின்சார ரயில் விபத்துக்குள்ளான விவகாரத்தில் மின்சார ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாலை பணிமனையில் இருந்து எடுத்துவரப்பட்ட மின்சார ரயில் விபத்துக்குள்ளான நிலையில் பிரேக் பழுதால் விபத்து ஏற்பட்டதாக லோகோ பைலட் பவித்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரித்த ரயில்வே தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகள் அடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கையில் ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாகவே விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.