சென்னை: மிகக்குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடு செய்துள்ள தமிழக அரசுக்கு சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:
தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டிய இந்த கலை நிகழ்ச்சியை நான் பாராட்டுகிறேன். மிகக் குறைந்த கால அளவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஏற்பாடு செய்துள்ள இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் தங்குவதற்காகவும், விளையாடுவதற்காகவும் செய்துள்ள ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. மக்கள் தங்கள் அன்பை செஸ் மூலமாக எங்களிடம் வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.