நாளை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள்

டில்லி

நாளை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்

ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம் ஆகும். அவ்வகையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்குக் கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும்.

நாளையுடன் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைவதால் இணையத்தில் தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யப் பலரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். பலரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இணையதளம் வாயிலாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனவே  நாளையுடன் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யக் காலக்கெடு நிறைவடைய உள்ளது

மத்திய அரசு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யத் தாமதித்தால், ரூ.5 லட்சத்திற்கும் குறைவாகத் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000-மும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000-மும் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.