கைதாவாரா டெல்லி துணை முதல்வர்? ஆம் ஆத்மியை குறிவைக்கிறதா மோடி அரசு?

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்புடைய 21 இடங்களில் மத்திய அரசின் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி ஆயத்தீர்வை கொள்கையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சில வாரங்களுக்கு முன்னதாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதனால், ஆயத்தீர்வை துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சிக்கல் உருவானது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அப்போதே செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா விரைவி கைது செய்யப்படலாம் என்று கூறியிருந்தார்.

இறங்கி வந்தாரா எடப்பாடி? இணைப்பை சாத்தியப் படுத்துவாரா ஓபிஎஸ்?

“மணீஷ் சிஷோடியாவுக்கு எதிரான ஒரு வழக்கு, சிபிஐ வசம் சென்றுள்ளது. அதில் அவரை சில நாட்களில் கைது செய்யப் போகிறார்கள். அது ஒரு பொய் வழக்கு. அது நீதிமன்றத்தில் நிற்காது. மணீஷ் சிசோடியா, நேர்மையான மனிதர். அவரை 22 ஆண்டுகளாக எனக்கு தெரியும். ஆம் ஆத்மி தலைவர்கள் ஜெயிலுக்கு போவதை பற்றி பயப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை” என்று அரவிந்த் கெஜ்ரிவால் சிலா வாரங்களுக்கு முன்னதாக கூறினார்.

தற்போது இந்த விவகாரத்தில் சிபிஐ மணீஷ் சிசோடியா தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

இது குறித்து மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், “சிபிஐ அதிகாரிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகளின் இல்லத்தில் இப்படி வந்து சோதனை செய்வது வருந்தத்தக்க செயல். இதற்கு முன்னதாக எங்கள் அமைச்சர் குறிவைக்கப்பட்டார். இப்போது அந்த குறி என் மீது திரும்பியிருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.