சென்னை:
விக்ரம்
நடிப்பில்
மிகப்
பிரமாண்டமாக
உருவாகியுள்ள
‘கோப்ரா’
திரைப்படம்,
வரும்
31ம்
தேதி
திரையரங்குகளில்
வெளியாகிறது.
அஜய்
ஞானமுத்து
இயக்கத்தில்
உருவாகியுள்ள
‘கோப்ரா’
படத்திற்கு
ஏ.ஆர்.
ரஹ்மான்
இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம்
இன்னும்
சில
தினங்களில்
வெளியாகவுள்ளதை
முன்னிட்டு
ரசிகர்களை
சந்திக்க
திட்டமிட்டுள்ளது
கோப்ரா’
டீம்.
விக்ரமின்
சூப்பர்
மேஜிக்
சினிமாவில்
தனக்கென
ஒரு
இடம்
கிடைக்க
பல
வருடங்கள்
போராடிய
விக்ரம்,
இப்போது
முன்னனி
நடிகராக
கலக்கி
வருகிறார்.
‘சேது’
படத்தில்
தொடங்கிய
விக்ரமின்
மேஜிக்,
இறுதியாக
அவர்
நடிப்பில்
வெளியான
‘மகான்’
திரைப்படம்
வரை
நாளுக்கு
நாள்
கூடிக்கொண்டே
தான்
சென்றுள்ளது.
இந்நிலையில்
விக்ரம்
நடிப்பில்
இம்மாதம்
இறுதியில்
கோப்ரா
திரைப்படமும்,
அடுத்த
மாதம்
கடையில்
‘பொன்னியின்
செல்வன்’
படமும்
வெளியாகின்றன.

கோப்ரா
மீது
நம்பிக்கை
விக்ரமின்
நடிப்பில்
இறுதியாக
வெளியான
சில
படங்கள்,
எதிர்பார்த்த
வரவேற்பை
பெறவில்லை.
ஆனால்,
கடைசியாக
அமேசான்
ஓடிடியில்
வெளியான
‘மகான்’
நல்ல
விமர்சனங்களைப்
பெற்றது.
முதன்முறையக
மகன்
துருவ்
விக்ரமுடன்
இணைந்து
நடித்த
மகான்,
திரையரங்குகளில்
வெளியாகவில்லை
என
விக்ரம்
கவலை
தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,
வரும்
31ம்
தேதி
வெளியாகவிருக்கும்
‘கோப்ரா’
படம்,
விக்ரமுக்கு
பெரிய
நம்பிக்கையை
கொடுத்துள்ளது.

பிரமாண்டக்
கூட்டணியில்
கோப்ரா
டிமாண்டி
காலனி,
இமைக்கா
நொடிகள்
என
கவனம்
ஈர்த்த
அஜய்
ஞானமுத்து
‘கோப்ரா’
படத்தை
இயக்கியுள்ளார்.
லலித்
குமார்
மிகப்
பிரமாண்டமாக
தயாரித்துள்ள
இப்படத்திற்கு
ஆஸ்கர்
நாயகன்
ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைத்துள்ளார்.
ஸ்ரீநிதி
ஷெட்டி,
கிரிக்கெட்
ஆல்ரவுட்னர்
இர்பான்
பதான்,
கே.எஸ்.
ரவிக்குமார்
உள்ளிட்ட
பலர்
இப்படத்தில்
நடித்துள்ளனர்.
முக்கியமாக
விக்ரம்
பல
கெட்டபுகளில்
நடித்துள்ளது,
படம்
மீதான
எதிர்பார்ப்பை
அதிகரிக்க
வைத்துள்ளது.

ரசிகர்களை
சந்திக்கும்
கோப்ரா
டீம்
‘கோப்ரா’
படத்தை
ரசிகர்கள்
கொண்டாட
வேண்டும்
என்பதற்காக,
அவர்களை
சந்திக்க
திட்டமிட்டுள்ள
விக்ரம்
அண்ட்
டீம்.
அதன்படி,
நாளை
(ஆக.23)
திருச்சி,
மதுரையில்
ரசிகர்களை
சந்திக்கின்றனர்.
அடுத்து
24ம்
தேதி
புதன்கிழமை
கோவையில்
நடக்கும்
நிகழ்ச்சியில்,
கோப்ரா
குழுவினரை
ரசிகர்கள்
சந்திக்க
ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
25ம்
தேதி
சென்னையில்
ட்ரெய்லர்
வெளியீட்டுடன்
ரசிகர்ளை
சந்திக்கிறது
கோப்ரா
டீம்.
அதனைத்
தொடர்ந்து
26ம்
தேதி
கொச்சி,
27ல்
பெங்களூரு,
28ல்
ஐதராபாத்
ஆகிய
நகரங்களில்
விக்ரம்
உள்ளிட்ட
கோப்ரா
குழுவினர்
ரசிகர்களை
சந்திக்கின்றனர்.
இதனால்
விக்ரம்
ரசிகர்கள்
உற்சாகத்தில்
உள்ளனர்.