ஆட்சி அமைத்ததும் நிலைமை மாறும்..! – சமூக செயற்பாட்டாளர்களிடம் நம்பிக்கை அளித்த ராகுல் காந்தி..!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று 2-வது நாள் நடைபயணத்தை நிறைவு செய்தபோது, அங்கிருந்த சமூக செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

காஷ்மீர் முதல்கன்னியாகுமரி வரையிலான ஒற்றுமை இந்திய பயணத்தை நேற்று குமரி காந்தி மன்றம் முன்பாக தொடங்கிய ராகுல் காந்தி இன்று மாலை நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிறைவு செய்தார்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை குமரி முதல் காஷ்மீரில் வரையில் சுமார் 3571 கிலோமீட்டர் 150 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்!! நேற்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை அசைத்து துவக்கி வைத்தார் நேற்று துவங்கிய நடைபயணம்அகத்தீஸ்வரர் விவேகானந்தா கல்லூரியில் 600 மீட்டர் பயணம் செய்தார்.

இன்று 2-வது நாள் நடைபயணத்தின் முடிவில், முளகுமூடு சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். வீட்டு திண்னையில் அமர்ந்து சமூக செயற்பாட்டாளர்களுடன் ராகுல்காந்தி பேசினார். மேலும் அரசியல் நிலவரம் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் நிலைமை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதில் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு ராகுல்காந்தியுடன் உரையாடினார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.