வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தப்புரம்: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் வசித்து வந்த தர்மபுரியை சேர்ந்த பத்மா மற்றும் கேரளாவை சேர்ந்த ரோஸ்லின் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன், துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
கொலை தொடர்பாக போலீசார் விசாரிக்கையில் எர்ணாகுளத்தில் திருவில்லா பகுதியை சேர்ந்த லைலா, அவரது கணவர் பகவல்சிங் மற்றும் மந்திரவாதி முகமது ஷபி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், செல்வம் பெருக வேண்டும் என்ற நோக்கில் பத்மா மற்றும் ரோஸ்லினி ஆகிய இருவரையும் நரபலி கொடுத்தது தெரியவந்தது.

நர மாமிசம்:
போலீசார் விசாரணையில், குற்றவாளி லைலா கொடுத்த வாக்குமூலம்: மந்திரவாதி ஷபி சில புத்தகங்களை கொடுத்தார். அதில் நரபலி மற்றும் இறைச்சி உண்பது போன்ற தகவல்கள் இருந்தன. நரபலிக்கு பின்னர், இருவரின் சதைகளை வெட்டி எடுத்து சமைத்து சாப்பிட்டோம். இருவரும் அணிந்திருந்த நகைகளை முகமது ஷபி எடுத்துக் கொண்டார். நகைகள் அனைத்தும் எர்ணாகுளம் மற்றும் பத்தனம் திட்டாவில் அடகு வைக்கப்பட்டது எனக் கூறினார்.
இது குறித்து, போலீசார் கூறுகையில், நரபலி கொடுக்கப்பட்ட 2 பேரின் உடல் பாகங்கள் 4 இடங்களில் மீட்கப்பட்டது. இதில் ரோஸ்லினின் சடலம் 56 துண்டுகளாகவும், பத்மாவின் உடல் 5 துண்டுகளாகவும் மீட்கப்பட்டது. இவர்கள் 3 பேரையும், வரும் அக்.,26ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து, தீவிர விசாரணை மேற்கொள்ள எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றனர்.
இது குறித்து, கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நாகரீக உலகில் இப்போதும் அரக்க மனதுடன் சிலர் உள்ளனர் என்பதையே இந்த செயல் காட்டுகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement