பறக்கும் கார்… சீன நிறுவனம் துபாயில் கொடுத்த சர்ப்ரைஸ்!

பறக்கும் தட்டை கேள்விப்பட்டிருக்கிறோம்… அதென்ன பறக்கும் கார்? என்று வியப்பு கலந்த கேள்வியை கேட்பவர்களுக்கு ஆமாம் …நாங்கள் பறக்கும் கார்களை விரைவில் சந்தைப்படுத்த உள்ளோம்… அதனை வாங்க ரெடியா இருங்கன்னு சொல்லாமல் சொல்லி இருக்கிறது சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம்.

மின்சாரத்தில் இயங்கக்கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் இறங்கி உள்ள இந்நிறுவனம், அதனை சர்வதேச அளவிலும் சந்தைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல்கட்டமாக எக்ஸ்2 என்று பெயரிடப்பட்டுள்ள பறக்கும் காரின் சோதனை ஓட்டத்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடத்தி உள்ளது.

ஆளில்லாமல் கார் இயக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது எனவும், அடுத்த தலைமுறைக்கான பறக்கும் காருக்கான முக்கிய நிகழ்வாக இச்சோதனை ஓட்டம் அமையும் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவன நிர்வாகம்.

மூக்கை நுழைத்த எலான் மஸ்க்; செலன்ஸ்கி செம.. டென்ஷன்!

இரண்டு பேர் மட்டும் அமர்ந்து அந்தரத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் ஒரு மூலைக்கு தலா 2 இறக்கைகள் வீதம், மொத்தம் 8 இறக்கைகள் உள்ளன. கார் மேலெழும்பவும் ,தரையிறங்கவும் இந்த இறக்கைகள் பயன்படும்படி அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

பறக்கும் காரின் சோதனை ஓட்டத்தால் உற்சாகம் அடைந்துள்ள கார் பிரியர்கள், இந்த கார் எப்போது சந்தைக்கு வரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.