மக்களிடையே சண்டையை மூட்டுவது தான் காங்கிரஸ் வேலை – அமித் ஷா தாக்கு!

காங்கிரஸ் கட்சியின் வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சிக்காக பாடுபடுகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 68 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12 ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என, இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ளன. ஆளும் கட்சி தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த வரலாற்றை மாற்றும் நோக்குடன் பாஜக களமிறங்கி உள்ளது.

இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிர்மார் நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். பாஜகவின் தேர்தல் பாடலான ‘ஏக் பார் பிஜேபி, பார் பார் பிஜேபி’ (ஒருமுறை பாஜக, மீண்டும் மீண்டும் பாஜக) தொடக்கி வைத்து அமித் ஷா பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். காங்கிரஸ் கட்சியானது, ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளது. ஆனால், அவர்களால் நம்முடைய பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்க முடியவில்லை.

பழங்குடியின அந்தஸ்து கோரி, 55 ஆண்டுகளாக ஹாதி சமூகத்தினரின் நடத்திய போராட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முடித்து வைத்தார். அவர் அவர்களின் வலியைப் புரிந்து கொள்கிறார். மேலும் மாநில மக்கள் மீது அவருக்கு ஒரு பற்றுதல் இருப்பதால், ஹிமாச்சல் என்னுடையது என்று பெருமையுடன் கூறுகிறார். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் பாஜ்க மீண்டும் ஆட்சிக்கு வரும். அரசியலில் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு முடிவு கட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.