நெல்லை: மதுரை கோட்டத்தில் வெள்ளனூர் – புதுக்கோட்டை, திண்டுக்கல் – அம்பாத்துரை, ராஜபாளையம் – சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 26ம் தேதி வரை கோயம்புத்தூர் – நாகர்கோயில் விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் காலதாமதமாக இயக்கப்படும். சென்னை – குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். 3 நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது.