சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்கை வழிகாட்டுதலை வழங்க, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்க முதல்வர் தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
