கோவை கார் வெடி விபத்து பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்? பாஜக எழுப்பும் சந்தேகம்!

கோவை கோட்டைமேட்டில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 23) அதிகாலை கார் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உடல் கருகி பலியானார்.

இதையடுத்து ஞாயிறு அன்று சம்பவ இடத்தில் 11 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இறந்தவரின் உடலை கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனைத்துறை தலைவர் மருத்துவர் ஜெபசிங் தலைமையில் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

காரில் உள்ள சிலிண்டர் வெடித்ததாக கூறப்படும் நிலையில் விசாரணை பல கோணங்களில் நடைபெற்று வருகிறது. உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடிப்பொருட்கள் கண்டெக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உயிரிழந்த நபர் மீது வழக்குகள் இல்லை, ஆனால் அவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றுள்ளது. சதி திட்டத்திற்காக வெடி பொருட்களை வைத்திருந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

ஜமேசா முபின் வீட்டிலிருந்து மர்ம நபர்கள் சில பொருள்களை எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சமொஅவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ” கோவையில் நேற்று முன் தினம் நடந்த மாருதி கார் வெடிப்பில் தொடர்புடையவர்களாக முகம்மது தல்கா, முகம்மது அசாருதீன், முகம்மது ரியாஸ், ஃ பிரோஸ் இஸ்மாயில், முகம்மது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இப்போது வரை இது சிலிண்டர் வெடித்த வழக்காகவே கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விரைந்து செயல்பட்டு ஐந்து பேரை கைது செய்த காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிற அதே வேளையில், இதன் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்கங்கள் உள்ளனவா என்பதையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.