பச்சையப்பன் அறக்கட்டளையில் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது – கோர்ட் அதிரடி

பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் தமிழ்நாட்டில் 6 கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையில் பேராசியர் பணிக்கு தகுதி இல்லாமல் உரிய சான்றிதழ் இல்லாமல் பணம் பெற்றுக்கொண்டு 254 பேருக்கு பேராசிரியர் பணிகள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த போது அது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், அந்த அறிக்கையில் மோசடிகள் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.