டெல்லி: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் இன்று மாலைக்கு பிறகு மழை தொடங்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களில் வட தமிழக மாவட்டம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.