செஞ்சிலுவை சங்கம் || தமிழ் கிளை நிர்வாகிகளின் சொத்துக்கள் முடக்கம்.!

இந்தியாவில் செஞ்சிலுவை சங்கம் கடந்த 1920 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த சங்கம் இந்தியாவில் வாழும் மனித வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு தன்னார்வ மனிதாபிமான அமைப்பு ஆகும்.

இந்த சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சுமார் ரூ.3.37 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஏனெனில், செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிதிமுறைகேடு குறித்து சிபிஐ கடந்த 2020-ம் ஆண்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் நிதி நிறுவனம் தொடர்பாக பதிவு செய்த வழக்கில், தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், முன்னாள் பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம்.நசுருதீன் உள்ளிட்டோருக்கு சொந்தமான  ரூ.3.37 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.