தெரிஞ்சிக்கோங்க..!! இனி பிராங்க் வீடியோ பெயரில் மக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை

சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் ,கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய 5 யூடியூப் சேனல்கள் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

குறிப்பாக இரண்டு யூடியூப் சேனல்களின் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சம்மனுக்கு ஆஜரான இரண்டு யூடியூப் சேனல் உரிமையாளர்களை அழைத்து யூடியூப் சேனல்கள் மூலம் வீடியோ வெளியிடுவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் பிராங்க் வீடியோக்கள் வெளியிட மாட்டோம் என போலீசாருக்கு எழுதியும் கொடுத்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட மற்ற யூடியூப் சேனல்களையும் இதேபோன்று விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளதாக புகார்தாரரான ரோகித் தெரிவித்துள்ளார். மேலும் ஆபாசமாகவும் பகைமையை வளர்க்கும் வகையிலும் இரண்டு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் ஜாதி மற்றும் மத, இனரீதியாகவும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தியும் பிறப்பு தங்கும் இடம் மொழி உள்ளிட்ட விவாகரங்களை வெளிப்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோ வெளியிட்டால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என யூடியூப் சேனல்களுக்கு சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

யூடியூப் சேனல்கள் பொதுமக்கள் பாதிக்காத வகையில் தங்களுக்குத் தெரிந்த நபர்கள் மூலம் விதிகளை மீறாமல் வீடியோ எடுத்து வெளியிடலாம் என தெரிவித்துள்ளது. மேலும் பிராங்க் வீடியோ எடுக்கப்படும் பொதுமக்களிடமும் உரிய விளக்கத்தை கொடுத்து வீடியோ எடுக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.