நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இன்று அதிகாலை 4.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக நேற்று மாலை லடாக்கில் உள்ள லே மற்றும் கார்கில் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. கார்கிலுக்கு வடக்கே 191 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.