கதையை எழுதி முடித்த ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாரூக்கான். அவருக்கு ஆர்யன் கான் என்ற மகன், சுஹானா கான் என்ற மகள், அப்ராம் என்ற மகன் இருக்கிறார்கள். 25 வயதாகும் ஆர்யன் கான் கலிபோர்னியாவில் உள்ள திரைப்படப் பள்ளியில் பிலிம் மேக்கிங் படிப்பை முடித்துள்ளார். அவருக்கு நடிகராவதை விட இயக்குனர் ஆவதில்தான் விருப்பம்.

தற்போது திரைப்படம் இயக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ள ஆர்யன் ஒரு கதையை எழுதி முடித்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது அப்பா ஷாரூக்கிற்குச் சொந்தமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் பெயர் எழுதப்பட்ட கிளாப் போர்டு, மற்றும் கதை எழுதிய புத்தகம் ஆகிய புகைப்படங்களுடன், “எழுதி முடித்துவிட்டேன், ஆக்ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை,” என்று பதிவிட்டுள்ளார். அது ஒரு வெப் சீரிஸுக்கான கதையாம், 2023ல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்கிறார்கள்.

அந்தப் பதிவின் கமெண்ட் பகுதியில், “வாவ்…யோசித்தது, நம்பியது, கனவு கண்டது நடந்தது…. இப்போது தைரியமாக… முதல் ஒன்றிற்கு எனது வாழ்த்துகள், அது எப்போதும் சிறப்பானது” என ஷாரூக் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆர்யனின் அம்மா கவுரி கான், “பார்ப்பதற்கு காத்திருக்க முடியவில்லை,” என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் ஆர்யனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.