ராஜஸ்தானில் திருமண வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து: 5 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற விபத்தில் உணவு தயாரிக்கும் போது காஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 52 பேர் காயமடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது புங்ரா கிராமம். இங்குள்ள ஒரு வீட்டில் நேற்று (டிச.,8) திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்காக உணவு தயார் செய்தபோது காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் காஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறின. இதில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 52 பேர் காயமடைந்தனர். 5 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

latest tamil news

இந்த விபத்தில் காயமடைந்த 52 பேருக்கும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் ஹிமான்சு குப்தா தெரிவித்தார். அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இன்று மாலை மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.