பிரதமரை புகழும் சர்வதேச ஊடகங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி :’குஜராத்தில், வரலாறு காணாத வெற்றியின் வாயிலாக பா.ஜ., அரசு புதிய சாதனை படைத்திருப்பதற்கு பிரதமர் மோடியின் செல்வாக்கே முக்கிய காரணம்’ என, பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.

குஜராத் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 156 இடங்களில் வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது. கடந்த 1995 முதல், தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து வெளியாகும், ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’, கிழக்காசிய நாடான, ஜப்பானில் இருந்து வெளியாகும், ‘தி நிக்கி ஏசியா, அல்ஜஸீரா, இன்டிபென்டன்ட், ஏ.பி.சி., நியூஸ்’ உட்பட பல்வேறு சர்வதேச ஊடகங்களும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

latest tamil news

‘குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தேர்தல் பிரசாரமே இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது. வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் செல்வாக்கை இது மேலும் வலுப்படுத்தும்’ என, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ‘தி கார்டியன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.பிரதமர் மோடியின் செல்வாக்கு மற்றும் 1995 முதல் தொடர் வெற்றியை சந்தித்து வரும் பா.ஜ.,வின் வளர்ச்சி குறித்தும்
ஜப்பானின், ‘தி நிக்கி ஏசியா’ செய்தி வெளியிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.