அவதானமாக செயற்பட வேண்டும்! இலங்கையில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்



இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பட்ட வளி மாசடைவின் தாக்கம் கடந்த சில தினங்களாக இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

அதற்கமைய தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, ஞாயிற்றுக் கிழமையுடன் (11.12.2022) ஒப்பிடும் போது சில மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை பாரியளவில் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவோர் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் மேலும் ஓரிரு நாட்களுக்கு இந்த நிலைமை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம், 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.