இலங்கையில் கோழிக்கறி கிலோ ரூ.1,200 ஆக உயர்வு

இலங்கையில் ஒரு கிலோ கோழிக்கறி ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் தற்போது கோழிக்கறிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வந்த கோழிக்கறி கிலோவிற்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

90 சதவீதம் சிறு மற்றும் நடுத்தர கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சங்கம், முட்டை விலை அதிகரிப்பால் கிறிஸ்துமஸ் கேக் விலையும் உயரும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.