காரில் சென்ற டிராவல்ஸ் அதிபரை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்..!

மதுரை மேலூர் அருகே டிராவல்ஸ் அதிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை அண்ணா நகரை சேர்ந்த சுரேஷ், சாம்பிராணிபட்டி அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த மர்மநபர்கள் அவரை வழிமறித்து நிறுத்தி, கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே சுரேஷ்-க்கும் சாம்பிராணி பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையால்  சுரேஷ் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.