அந்தமான் அருகே காற்றுழத்த தாழ்வுநிலை: ராமேஷ்வரம், தூத்தூக்குடி பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லத்தடை

ராமேஷ்வரம்: அந்தமானுக்கு அருகே உருவாகியுள்ள காற்றுழத்த தாழ்வு நிலை காரணமாக, கடற்பகுதியில் சூறைக்காற்று வீசுவதால்,  ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த  மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 3 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 20-ம் தேதி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும், 21-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 20, 21, 22-ம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

இதையடு த்து, ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி கடல் பகுதிகளில்  பலத்த சூறைக்காற்று வீசுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

மீன்வளத்துறை அறிவிப்பை அடுத்து தூத்துக்குடி ராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

 பழவேற்காடு அருகே ஆண்டிக்குப்பதில் நேற்று மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பு இடையே மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது இதையடுத்து பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க ஆண்டிக்குப்பம் மீனவர்களுக்கு தடை விதித்து சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.