கடலோர தமிழகத்தில் 23, 24-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் 

சென்னை: கடலோர தமிழகத்தில் 23 மற்றும் 24-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: “தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இதன் காரணமாக 23ம் தேதி தமிழகத்தின் கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24ம் தேதி தமிழகத்தின் கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடாவிற்கு வரும் 22ம் தேதி வரை செல்ல வேண்டாம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.