
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய் மற்றும் மகள் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
விமானத்தில் வந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட 2 பேருக்கும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எந்தவகை கொரோனா என மாதிரி ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது .