ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 67 வயது முதியவர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 67 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் நகரில் இயங்கிவரும் ஜிம்மில் பிரகலாத் நிகம் என்பவர் இரவு 7.30 மணியளவில் வழக்கம்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.