நள்ளிரவில் ஆடைகளின்றி வீடுவீடாகச் சென்று காலிங்பெல்லை அடித்துச்சென்ற பெண் – உ.பியில் பீதி

உத்தரபிரதேசத்தில் அடையாளமற்ற இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் ஆடையின்றி வீடுவீடாகச் சென்று காலிங்பெல்லை அடித்துவிட்டு அங்கிருந்து செல்வதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒருவீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து குடியிருப்புவாசி ஒருவர் போலீசில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், ”ஆடைகளின்றி நடந்துவந்த ஒரு இளம்பெண் எங்கள் வீட்டு காலிங்பெல்லை அடித்துவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அந்த பெண் எங்கள் வீட்டை கடந்துசென்ற 5 நிமிடங்கள் கழித்து, 2 பைக்குகளில் வந்தவர்கள் அப்பெண்ணை பின்தொடர்ந்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு, போலீஸ் ரோந்து வாகனமும் அவர்களை பின்தொடர்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணின் வயது 25க்குள் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
image
இதுகுறித்து காவல் அதிகாரி கூறுகையில், “ராம்பூர் மாவட்டத்தில் மிலக் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளானது ஜனவரி 29ஆம் தேதி இரவு பதிவானது. அந்த பெண்ணை போன்று யாரேனும் பார்த்தால் முதலில் அவருக்கு ஆடை உடுத்துவியுங்கள். பின்னர் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவியுங்கள்” என்று வீடியோ ட்வீட்டில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.