Dhanush: தனுஷின் பேச்சால் ஏற்பட்ட சலசலப்பு..கொந்தளித்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். மேலும் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவரான தனுஷ் தற்போது பிசியாக பல படங்களில் புது உத்வேகத்துடன் நடித்து வருகின்றார்.

அந்த உத்வேகத்திற்கு கடந்தாண்டு வெளியான அவரின் படங்களின் வெற்றி மிகமுக்கிய காரணமாக அமைந்தது. தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த தனுஷிற்கு கடந்தாண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.

AK62: விஜய் – அஜித்திற்காக மோதிக்கொண்ட ரசிகைகள்..!அதுக்குன்னு இப்படியா ?

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தனுஷிற்கு தேடி தந்தது. இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து மிரட்டிய நானே வருவேன் திரைப்படமும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் இவ்விரு வெற்றியும் தனுஷின் மார்க்கெட்டை மீண்டும் நிலைநாட்டியது. இந்நிலையில் தற்போது தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகவுள்ளார் தனுஷ்.

இதைத்தொடர்ந்து வாத்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஆந்திராவில் நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ், எனக்கு தெலுங்கு தெரியாது நான் தமிழில் பேசுகிறேன் என கூறினார். இதனால் அங்கிருந்த தெலுங்கு ரசிகர்கள் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து எங்களுக்கு தமிழ் புரியவில்லை என தெலுங்கு ரசிகர்கள் கூற அதன் பிறகு தனுஷ் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். இந்நிலையில் ஆந்திராவில் நடைபெற்ற பட ப்ரோமோஷன் விழாவில் தனுஷ் தெலுங்கில் பேசாதது அங்குள்ள ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாம். இதன் காரணமாக வாத்தி படத்திற்க்கு ஆதரவு இருக்குமா என சிலர் சந்தேகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.