ஈரோடு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக 455 புகார்கள் வரப்பெற்று 43 வழக்குகள் பதிவு..!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 455 புகார்கள் பெறப்பட்டு 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பரிசு பொருட்கள் தொடர்பான புகார்கள் வந்தால் சம்பவ இடங்களுக்கு உடனுக்குடன் சென்று விசாரணை நடத்த நான்கு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.