தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 2012 செப்டம்பர் 26-ம் தேதி முதல், 2015 ஏப்ரல் 30-ம் தேதி வரை உதவி கருவூல அலுவலராக கார்த்தியேன், அமலரசு, கூடுதல் கருவூல அலுவலராக முரளி ஆகியோர் பணிபுரிந்திருக்கின்றனர்.

இவர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு சேர வேண்டிய அரசின் உதவித் தொகையில், தங்களுக்குத் தெரிந்த சாந்தகுமாரி என்பவரின் வங்கிக் கணக்கில் 43,64,839 ரூபாயும், ராஜேந்திரின் என்பவரது வங்கிக் கணக்கில் 10,64,929 ரூபாயும், கெளரி என்பவரது வங்கிக் கணக்கில் 61,661 ரூபாயும் என மொத்தம் 54,91,429 ரூபாயை மோசடி செய்திருக்கின்றனர்.
இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட கருவூல அலுவலர் அனுஜா விசாரணை நடத்தி, இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், கார்த்திகேயன், அமலரசு, முரளி ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், நீதிபதி லலிதா வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறையும், 21,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.