ஹெலிகாப்டர் விபத்து – தேனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் உடலை இன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வர திட்டம்

அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் உடல், இன்று தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ரக ஹெலிகாப்டர், நேற்று காலை அருணாச்சலபிரதேசத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து மண்டலா மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த லெப்டினெண்ட் ரெட்டி மற்றும் தேனி ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் ஆகிய 2 விமானிகள் உயிரிழந்தனர்.

மேஜர் ஜெயந்தின் உடல் இன்றிரவு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலிக்கு பின் நாளை ஜெயமங்கலம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மேஜர் ஜெயந்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.