இந்திய – சீன எல்லைப் பகுதியில் நிலைமை சீராக இருப்பதாக சீனா தகவல்!

இந்திய, சீன எல்லைப் பகுதியில் அவசரகால கட்டுப்பாடுகள் முடிந்து விட்டதாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான சீன தூதரக அதிகாரி சென் ஜியான்ஜூன், இந்தியாவுடனான உறவை நீண்டகால கண்ணோட்டத்தில் சீனா பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இருதரப்பு உறவுகள் பல சிரமங்களை எதிர் கொண்டாலும், சீனாவில் நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை என்றும் சென் குறிப்பிட்டார்.

ஜி20 மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர் பதவியில் இந்தியா தனது பங்கை நிறைவேற்றுவதற்கு சீனா ஆதரவளிக்கும் என்றும் ஜியான்ஜுன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.