ரயில் பயணிகள் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்த சம்பவம்-நொய்டாவை சேர்ந்த ஒருவர் கைது

கேரளாவின் கோழிக்கோடு அருகே ரயிலில் சென்ற பயணிகள் மீது அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், நொய்டாவை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் சென்ற விரைவு ரயில், எலத்தூர் பகுதியில் சென்றபோது, ஒருவர் பயணிகளின் மீது திடீரென எரிபொருளை ஊற்றி தீ வைத்ததில், 9 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அப்பகுதி தண்டவாளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் ரயிலில் தீப்பற்றி எரிந்ததை கண்டு தப்பிக்க முயன்றபோது உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகளும், கேரள அரசின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.