சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை… உடலை துண்டுதுண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டிய இளைஞன் – கொடூர சம்பவம்

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் மால்வி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 29-ம் தேதி மாயமானார். பழங்குடியின சமுகத்தை சேர்ந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

ஆனால், கடந்த 1-ம் தேதி அந்த கிராமத்தில் பாழடைந்த கட்டிடத்தில் இருந்து சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டுள்ளார்.

சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதபரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிறுமியின் அண்டை வீட்டில் வசித்து வந்த 20 வயது இளைஞனை கைது செய்தனர். பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிராமத்தில் வசித்துவந்த கமலேஷ் என்ற அந்த இளைஞர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து பின் சிறுமியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் அடைத்து பாழடைந்த வீட்டில் வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல் ஊருக்குள் சுற்றிவந்துள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞர் கமலேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.