எச். ராஜாவுக்கு மாட்டுக்கறி விருந்து.. சீமான் பேச்சால் அதிர்ந்த பாஜக.. திருமாவளவனையும் விடலையே!

சென்னை:
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை தனது வீட்டுக்கு வந்து மாட்டுக் கறி சாப்பிடுமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் திமுகவுக்கு அடுத்தபடியாக ஒரு கட்சி பாஜகவை விமர்சிக்கிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, எச். ராஜாவுக்கும், சீமானுக்கும் இடையேயான வார்த்தை போர் சமூக வலைதளங்களையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் எல்லாம் உண்டு.

நிலைமை இப்படி இருக்க, சில தினங்களுக்கு முன்பு சீமானை பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் எச். ராஜா பேசியிருந்தார். அவர் கூறுகையில், “ஒருகாலத்தில் சீமானுடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை மட்டும் சீமான் கைவிட்டுவிட்டால் அவருடன் பேச நான் தயாராக இருக்கிறேன்” என எச். ராஜா பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.

மாட்டுக்கறி சாப்பிடுவோம்:
இந்நிலையில், இதுகுறித்து சீமானிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “எச். ராஜாவுக்கு நான் சொல்லும் ஒரே பதில் “வாய்ப்பில்ல ராஜா”. அதுவும் உங்களுடன் வருவதற்கு வாய்ப்பே இல்லை” எனக் கூறினார். அதற்கு அந்த நிருபர், “உங்களை தேசவிரோதினு சொன்ன ஒருவர் திடீரென இவ்வளவு பாசம் காட்டுகிறாரே.. ” எனக் கேட்டார். அதற்கு பதில் கூறிய சீமான், “நானும் எச். ராஜாவை பாசமா கூப்பிடுகிறேன். என் வீட்டுக்கு வாங்க. என் மனைவி அருமையாக மாட்டுக்கறி சமைப்பார். சாப்பிட்டு ரெண்டு பேரும் பேசுவோம் (சிரிக்கிறார்). நட்பு வேறு. அரசியல் கோட்பாடு என்பது வேறு” என்றார்.

திருமாவளவனுக்கு உரிமை இல்லை:
“தமிழ் தேசிய சித்தாந்தம் தோல்வி அடைந்த ஒன்று என திருமாவளவன் கூறியிருக்கிறாரே..” என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “என் அண்ணன் திருமாவளவனுக்கு நான் சொல்லும் பதில் “பொறுத்திருந்து பாருங்கள்” என்பதுதான். அவர் தோற்றுவிட்டார் என்று திருமாவளவன் கூறலாமே தவிர, வேறு யாரும் ஜெயிக்க முடியாது என்று சொல்லும் உரிமை அவருக்கு கிடையாது.

பயம் இருக்குல்ல..:
தமிழ் தேசிய அரசியலை எனக்கு கற்பித்தவரே திருமாவளவன்தான். என்றைக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார் தங்கம் வெல்ல மாட்டார். மாணவன்தான் வெல்வான். தோற்றுபோன சித்தாந்தம் குறித்து ஏன் பேசுகிறீர்கள். விட்டுவிட வேண்டியதுதானே. பயம் இருப்பதால்தானே பேசுகிறீர்கள்” என சீமான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.