வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது அணியை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி

வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது அணியை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்துக் கொள்வதற்காக 2023.04.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி முழுமையான கடன் காலப்பகுதிக்கான 13மூ வீத குறைந்த வட்டி வீதத்தைப் பேணி இக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தரம் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களில் பொருத்தமான தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்களை 07 ஆவது அணியின் கீழ் வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்;கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு குறைந்தபட்ச வட்டி வீதமான 13 வீதத்தை பேணுவதன் மூலம் இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன, இதன்ஆபாது தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.