கவனத்தை ஈர்க்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படக்குழு

மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் இயக்கி நடித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் கடந்தும் வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்குவதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர் இந்த வருடத்தில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இது நண்பர்கள் சம்மந்தப்பட்ட படம் என்பதால் நண்பர்கள் தின வாரத்தை முன்னிட்டு இந்த வார நாட்களில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த சுப்பிரமணியபுரம், பாய்ஸ், பஞ்சதந்திரம், என்றென்றும் புன்னகை, சென்னை 60028 ஆகிய நண்பர்கள் சம்மந்தப்பட்ட பட போஸ்டர்களை ரீ – கிரியேட் செய்து இப்படக்குழுவினர்கள் வெளியிட்டு வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.