புதிய சரித்திரம் படைத்திருக்கும் அல்லு அர்ஜுன்.. வெற்றி தொடரட்டும்: மனதார வாழ்த்திய கமல்.!

69வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு திரையுலகை சார்ந்த ‘கடைசி விவசாயி’ சிறந்த தமிழ் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு ஸ்பெஷன் மென்சன் கிடைத்துள்ளது.

அத்துடன் பாடகி ஸ்ரேயா கோஷல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் தேசிய விருது வென்றுள்ளவர்களுக்கு திரையுலகை சார்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புஷ்பா’ படத்திற்கு இசையமைத்த தேவிஸ் பிரசாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதில் ‘புஷ்பா’ படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவிஸ்ரீ பிரசாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாகுக! என்று பதிவிட்டிருந்தார். தேசிய விருது வென்றவர்களில் இசையமைப்பளார் தேவிஸ்ரீ பிரசாந்த் ஒருவருக்கு மட்டும் கமல் வாழ்த்து தெரிவித்திருந்தது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல். அதில், 69 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது ‘கடைசி விவசாயி’ படத்திற்கும், அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மறைந்த நல்லாண்டி அவர்களுக்கும் ஸ்பேஷல் மென்ஷன் அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் மற்றும் குழுவினருக்கு என் அன்பும் பாராட்டும்.

அப்பாக்கிட்ட இல்லை, எனக்கு கிடைச்சதும்.. தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு நடிகர் எனும் புதிய சரித்திரத்தை படைத்திருக்கும் அல்லு அர்ஜுன், சிறந்த படமாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் இயக்குனர் ஆர். மாதவன் மற்றும் குழுவினர், பல பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இயக்குனர் ராஜமௌலி மற்றும் குழுவினர், புஷ்பா படத்திற்காக சிறந்த பாடல் இசை பிரிவில் விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத், இரவின் நிழல் படத்தின் பாடலுக்காக சிறந்த பாடகி விருது பெற்ற ஸ்ரேயா கோஷல்,

சிறந்த கல்வி படம் பிரிவில் ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ படத்தை இயக்கி விருது வென்றுள்ள இயக்குனர் பி. எலனின், ‘கருவறை’ ஆவணப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தென்னிந்திய சினிமா உள்ளடக்கத்திலும், தொழில்நுட்பத்திலும் பல புதிய உச்சங்களை எட்டியதன் அடையாளம் தேசிய விருதுகளின் பட்டியலில் எதிரொலிக்கிறது. இந்த வெற்றி தொடரட்டும் என பதிவிட்டுள்ளார். கமலின் இந்த அறிக்கை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படம்.. ‘கடைசி விவசாயி’ படம் பார்த்து எமோஷனலான பிரபல இயக்குனர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.