'ஜெய் பீம்' படத்துக்காக போட்ட ட்வீட்.. நக்கலடித்த பெண்: அசோக் செல்வன் செய்த தரமான சம்பவம்.!

69வது தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, அது சம்பந்தமான பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது. நேற்று முன்தினம் மாலை வெளியான இந்த அறிவிப்பில் சிறந்த தமிழ் படமாக ‘கடைசி விவசாயி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ‘இரவின் நிழல்’ படத்திற்காக ஸ்ரேயா கோஷல் மற்றும் ‘கருவறை’ என்ற குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அனைவரும் எதிர்பார்த்த ‘ஜெய் பீம்’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படாதது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லியோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், தமிழ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படம் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அத்துடன் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுக்களை குவித்தது ‘ஜெய் பீம்’ படம். இந்தப்படத்திற்கு நிச்சயமாக விருது அறிவிக்கப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால் ‘ஜெய் பீம்’ படத்திற்கு விருதுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சார்ந்த சிலரும் அப்செட் ஆகியுள்ளனர். இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய விருது பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் ‘கடைசி விவசாயி’ படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், தேசிய விருதிற்கு மிகவும் தகுதியான படம் என்றும் தெரிவித்துள்ளார்.

Ashok Selvan: பிரபல நடிகரின் மகளுடன் அசோக் செல்வனுக்கு விரைவில் டும் டும் டும்: தீயாய் பரவும் தகவல்.!

மேலும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு விருதுகள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பி, இதயம் உடையும் எமோஜியை பதிவிட்டுள்ளார். இதற்கு வலைத்தளவாசி ஒருவர், ‘நீ பார்க்க நல்லா இருக்க. நல்லா நடிக்கிற. அதோட நிப்பாட்டு’ என கமெண்ட் அடித்துள்ளார். அதற்கு அசோக் செல்வன், ‘போடி வெண்ணை’ என பதில் அளித்துள்ளார்.

இதில் ஹைலைட் என்னவென்றால் அசோக் செல்வன் குறித்து ட்வீட் போட்ட வலைத்தளவாசியின் ஹேண்டில் பெயரும் போடி வெண்ணை என்பது தான். அதையே தன்னை பற்றி பேசியவருக்கு பதிலாக அளித்து தக் லைப் செய்துள்ளார் அசோக் செல்வன். அவரின் கமெண்ட் இணையத்தில் வைரலாகி வர, அசோக் செல்வனின் பதிலடியை பாராட்டி தள்ளி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அடுத்த காதல் திருமணம்: நடிகையுடன் அசோக் செல்வனுக்கு விரைவில் டும் டும் டும்.?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.