காவிரி நீர்: ஒரே அடியாக கை விரித்த கர்நாடகா அரசு – என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?

காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் கர்நாடகா அரசு தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது.

இந்த சூழலில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கர்நாடாகா அரசு தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடவே முடியாது என்று கூறியுள்ளது.

“கர்நாடகாவில் 47 சதவீதத்துக்கு அளவுக்கு நீர் பற்றாக்குறை இருப்பதால் கர்நாடகாவுக்கு தேவையான குடிநீருக்கே தண்ணீர் இல்லை. நான்கு அணைகளில் போதுமான அளவு நீர் இல்லை. எனவே காவிரி நீரை திறக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது. மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் நீர் திறக்க முடியாது” என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் ஸ்டாலின்? – பி.ஆர்.பாண்டியன் காட்டம்

காவிரி நீரை இரு மாநிலங்களும் எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும், நீர் பற்றாக்குறை இருக்கும் போது எவ்வாறு பங்கிட வேண்டும், சாதாரண நாள்களில் எவ்வாறு பங்கிட வேண்டும் என்பது குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் உள்ளன. ஆனால் கர்நாடகா அரசு அதை காற்றில் பறக்கவிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் புறம்பாக செயல்பட்டு வருகிறது.

கர்நாடகா அரசு நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு தனக்கான உரிமையை ஏன் கேட்க மறுக்கிறது என்று டெல்டா மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்றும் கேட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.