திருநெல்வேலி தம்மை இடைத் தரகர்கள் மூலம் அமலாக்கத்துறை மிரட்டியதாகச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி ஒரு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் அவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் பல கிடைத்துள்ளன இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் அப்பாவு, “மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற […]
