மழைக்காலம் தொடங்கியதால் பல இடங்களில் குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கட்டட மறைவிடங்கள், புதர்மண்டிய இடங்கள், கறையான் புற்று போன்ற இடங்கள் பாம்புகள் உட்பட பல ஜந்துக்களுக்கு வசிப்பிடமாக இருக்கும். மழை நேரத்தில், அங்கிருந்து வெளியே கிளம்புவதால் பக்கத்தில் உள்ள வீடுகளுக்குள் புகும் சூழ்நிலை ஏற்படுகிறது.
மழைக்காலத்தில் பாம்பு போன்ற குளிர் ரத்த உயிரினங்கள் கதகதப்பான வெப்பத்தை விரும்புகிறது. அத்துடன் மழைக் காலத்தில் தவளை, தேரை போன்ற உயிரினங்களை சாப்பிட பாம்புகள் அதிகம் வெளிவருகின்றன. சில வகை பாம்பு இனங்களுக்கு இது இனப்பெருக்கக் காலமாக உள்ளது. எனவே, மனித வசிப்பிடங்களையும், தார்ச்சாலைகளையும் விரும்பி வருகிறது. இது பல இடங்களில் இந்த பிரச்னையாக உள்ளது.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மழைக் காலத்தில் பாம்புகள் பாதுகாப்பான இடத்தைத் தேடுவது வழக்கம். அதற்கு கதகதப்பான வெப்பம் தேவைப்படுவதால், அதற்கான இடத்தைத் தேடிச் செல்கிறது. அதனால் கார், பைக் இன்ஜின், சிலிண்டர், ஷூ போன்ற மறைவிடங்களில் வந்து பதுங்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அடர்த்தியான செடிகள், வீட்டை சுற்றிக் கிடக்கும் தேவையற்ற பொருள்களிலும் மறைந்துகொள்ளும்.
இதுபோன்ற இடங்களில், பாம்புகள் இருந்தால் அருகில் செல்லக்கூடாது. ஆயுதங்களால் அடித்துத் துன்புறுத்திக் கொல்லவோ, வெளியேற்றவோ கூடாது. எங்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் வனத்துறை அதிகாரிகள் கூறும்போது,
“பாம்பை பிடிக்க முயற்சி செய்தால், நீளமான குழாயில் ஒரு துவாரத்தை துணியால் மூடி பாம்பு அருகில் வைக்க வேண்டும். பாம்பு அதற்குள் செல்ல வாய்ப்புள்ளது. உடனே, குழாயின் மறு துவாரத்தை துணியால் மூடினால், பாம்பு வெளியே வராது.
அல்லது அட்டைப் பெட்டியில் சரியாக ஓட்டை போட்டு, அருகில் வைத்தால் அதற்குள், பாம்பு செல்லும். உடனே துவாரத்தை மூடி விட வேண்டும். விஷமுள்ள பாம்பாக இருந்தால், இந்த முறைகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். சென்னை மற்றும் சுற்றுவட்டடார பகுதியைச் சேர்ந்தவர்கள், 044 – 2220 0335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மற்றவர்கள் அந்தப் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலக தொடர்பு எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என, வனத்துறை அதிகாரிகள்” கூறினர்.
முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியவை
-
வீட்டைச் சுற்றி பழைய பொருள்களை அடைக்காமல், குப்பைகள் இல்லாமல் துய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.
-
கழிவு நீர் குழாய்கள் தொடக்கத்திலும் முடிவிலும் சல்லடை போன்ற வலையால் மூடுங்கள்.
-
தூங்கும் அறை தூய்மையாக இருக்க வேண்டும். தூங்கும் முன் கட்டில்கள், தலையணை, மெத்தை விரிப்பு தூசிதட்டி, உதறி பயன்படுத்துங்கள்.

-
வீட்டில் நீர் வடிய சுவற்றை ஓட்டிய தரையில் போட்டுள்ள துளைகளை பாதுகாப்பாக அடைதுக்கொள்ளுங்கள்.
-
கழிவறை, குளியலறை மற்றும் வீட்டைச் சுற்றி தேவையற்ற பொருள்களைப் போட்டு அடையவிடக் கூடாது. குப்பைகள், எலிகள், புதர்கள் இருக்கக் கூடாது.
-
ஷு, செருப்பு வைக்கும் இடங்களைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். அணியும் முன்பு நன்றாகச் சோதித்து அணிய வேண்டும்.
-
வாகனத்தை எடுக்கும் முன் கவனமாக சோதித்து எடுங்கள்.
பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது. இந்த சமயங்களில் மக்களுக்கு உதவ, சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்களை வனத்துறை வெளியிட்டுள்ளது.
விவரங்கள்:
1) பாபா – 98415 88852
(போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)
2) சக்தி – 90943 21393
(போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)
3) கணேசன் – 74489 27227
(அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)
4) ஜெய்சன் – 80562 04821
(குரோம்பேட்டை பகுதிகள்)
5) ராபின் – 88078 70610
(குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)
6) மணிகண்டன் – 98403 46631
(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)
7) ரவி – 96001 19081
(குரோம்பேட்டை ஏரியா)
8) ஷாவன் (அ) ஷேவன் – 94450 70909 & 63791 63347
(திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)
9) நாகேந்திரன் – 99400 73642
(மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)
10) பிரவீன் – 99622 05585
(தாம்பரம் சுற்றுவட்டாரம்)
11) அர்ஜூன் – 91765 43213
ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)
12) சந்திரன் – 98407 24104
(தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)
13) முருகேசன் – 98848 47673
(பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)
14) விஜய் ஆனந்தன் – 98843 06960
(சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)
15) ஆதித்தன் (பாரஸ்ட் கார்டு) – 84895 17927
(செங்கல்பட்டு மாவட்டம்)